×

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி… விபத்தை ஏற்படுத்திய நபர் கைது…

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே சாலையில் நடந்துசென்ற மூதாட்டி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள குப்பமுத்துப்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள்(67). இவர் விவசாய பணிக்காக இன்று காலை புகையிலைப்பட்டி சாலையில் நடந்துசென்றார். அப்போது சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று மூதாட்டியின் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த
 

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே சாலையில் நடந்துசென்ற மூதாட்டி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள குப்பமுத்துப்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள்(67). இவர் விவசாய பணிக்காக இன்று காலை புகையிலைப்பட்டி சாலையில் நடந்துசென்றார். அப்போது சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று மூதாட்டியின் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீசார் மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த பண்ணைப்பட்டியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை கைதுசெய்தனர். சாலையி விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குப்பமுத்துப்பட்டி பகுதி கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.