×

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் மூச்சு திணறலால் பயணி பலி!

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் மூச்சு திணறல் ஏற்பட்டு, பயணி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் (54). இவர் நேற்று முன்தினம் மைசூரு – தூத்துக்குடி விரைவு ரயிலில் தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல் அருகே சென்றபோது சந்தான கிருஷ்ணனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சக பயணிகள் அதிர்ச்சிக்குள்ளான நிலையில், சிலர் அவருக்கு உதவ செய்தனர். எனினும், அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து
 

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் மூச்சு திணறல் ஏற்பட்டு, பயணி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் (54). இவர் நேற்று முன்தினம் மைசூரு – தூத்துக்குடி விரைவு ரயிலில் தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல் அருகே சென்றபோது சந்தான கிருஷ்ணனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் சக பயணிகள் அதிர்ச்சிக்குள்ளான நிலையில், சிலர் அவருக்கு உதவ செய்தனர். எனினும், அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து பயணிகள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர், ரயில் திண்டுக்கல் வந்தடைந்ததும், ரயில்வே போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.