×

கனிமவள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திண்டுக்கல் மாவட்ட கனிமவள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனை காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட கனிமவள அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கனிமவள கொள்ளை தொடர்பாக அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்க ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இதனையடுத்து, நேற்று மாலை 6 மணியளவில், மாவட்ட கனிமவள அலுவலகத்தில் டி.எஸ்.பி நாகராஜன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை நீடித்த
 

திண்டுக்கல் மாவட்ட கனிமவள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனை காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட கனிமவள அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கனிமவள கொள்ளை தொடர்பாக அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்க ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இதனையடுத்து, நேற்று மாலை 6 மணியளவில், மாவட்ட கனிமவள அலுவலகத்தில் டி.எஸ்.பி நாகராஜன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனையின் போது, மாவட்ட கனிமவள அதிகாரி பெருமாள் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாக வில்லை.