×

கல்லூரி மாணவியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட முன்னாள் காதலன் உள்பட இருவர் கைது!

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட முன்னாள் காதலன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள மைக்கேல்பாளையத்தை சேர்ந்தவர் 20 வயது பெண். இவர் நொச்சஓடைப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். அப்போது, அவருக்கும், வகுப்பில் உடன் படித்து வரும் ரெண்டலபாறையை சேர்ந்த சதீஷ் (20) என்பருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. இதனால் இருவரும் தங்களது ஆபாச புகைப்படங்களை
 

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட முன்னாள் காதலன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள மைக்கேல்பாளையத்தை சேர்ந்தவர் 20 வயது பெண். இவர் நொச்சஓடைப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். அப்போது, அவருக்கும், வகுப்பில் உடன் படித்து வரும் ரெண்டலபாறையை சேர்ந்த சதீஷ் (20) என்பருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. இதனால் இருவரும் தங்களது ஆபாச புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

இந்த நிலையில், மாணவிக்கு தூக்குக்குடியை சேர்ந்த அருண்(25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்து ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் சதீஷ், அருணுக்கு மாணவியின் ஆபாச புகைப்படங்களை அனுப்பி மிரட்டி உள்ளார். அத்துடன், தனது நண்பரான மைக்கேல்பாளையத்தை சேர்ந்த மரிய நெல்சனுக்கும் (21) அனுப்பிய நிலையில், அவர் மாணவியின் ஆபாச படங்களை பேஸ்புக் சமூக வளைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை அறிந்த அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி, இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் முன்னாள் காதலன் சதீஷ் (20) மற்றும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட மரிய நெல்சன் ஆகியோரை கைதுசெய்து, வேடசந்தூர் சிறையில் அடைத்தனர். மேலும், தூத்துக்குடியை சேர்ந்த அருண் உள்ளிட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.