யூகோ வங்கி மீது நடவடிக்கை தேவை – இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
வங்கி பணியாளர் தேர்வில் இடஒக்கீட்டை அல்படுத்த மறுக்கும் யூகோ வங்கி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை என்றும், அதை மீறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இடஒதுக்கீடு சரியாக அமலாவதை மத்திய, மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும்
Oct 17, 2020, 20:23 IST
வங்கி பணியாளர் தேர்வில் இடஒக்கீட்டை அல்படுத்த மறுக்கும் யூகோ வங்கி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை என்றும், அதை மீறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இடஒதுக்கீடு சரியாக அமலாவதை மத்திய, மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.