×

ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதியதில், 5 வயது சிறுவன் பலி

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே ஆட்டோ மீது, இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்குட்பட்ட எ.வெள்ளோடு ஊராட்சி சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குழந்தைராஜ். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 5 வயதில் யோஸ்வா என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை மாரம்பாடியில் நடந்த திருவிழாவிற்கு, தனது மகன் யோஸ்வாவுடன் சென்ற விண்ணரசி, பின்னர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். நந்திகோவில்பட்டி அருகே சென்றபோது இருசக்கர
 

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே ஆட்டோ மீது, இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்குட்பட்ட எ.வெள்ளோடு ஊராட்சி சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குழந்தைராஜ். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 5 வயதில் யோஸ்வா என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை மாரம்பாடியில் நடந்த திருவிழாவிற்கு, தனது மகன் யோஸ்வாவுடன் சென்ற விண்ணரசி, பின்னர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். நந்திகோவில்பட்டி அருகே சென்றபோது இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற ஆட்டோவின் மீது அதிவேகமாக மோதியது.

இதில், வாகனத்தில் அமர்ந்திருந்த சிறுவன் சாலையில் தூக்கிவீசப்பட்டதில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில், சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த வேடச்சந்தூர் போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஒட்டுநர் கிருஷ்ணன் என்பரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.