×

12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- போக்சோ சட்டத்தில் விவசாயி கைது

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுமியின் தாய் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமி கர்ப்பமடைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து
 

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுமியின் தாய் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

சிறுமி கர்ப்பமடைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டர். அதில், சிறுமலை பகுதியை சேர்ந்த விவசாயி வெள்ளியங்கிரி(40) என்பவர், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வெள்ளியங்கிரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதுசெய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.