×

அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேர் கைது

திண்டுக்கல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நிறுத்திய இருசக்கர வாகனம் திருடப்பட்ட வழக்கில் 3 பேரை, போலீசார் கைதுசெய்தனர். திண்டுக்கல் அடுத்த சேவுகம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (22). இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றார். மருத்துவமனை முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு சென்ற நிலையில், திரும்பி வந்தபோது வாகனம் மாயமானது. இதுகுறித்து பிரபாகரன், திண்டுக்கல் மாநகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவுசெய்து
 

திண்டுக்கல்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நிறுத்திய இருசக்கர வாகனம் திருடப்பட்ட வழக்கில் 3 பேரை, போலீசார் கைதுசெய்தனர்.

திண்டுக்கல் அடுத்த சேவுகம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (22). இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றார். மருத்துவமனை முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு சென்ற நிலையில், திரும்பி வந்தபோது வாகனம் மாயமானது. இதுகுறித்து பிரபாகரன், திண்டுக்கல் மாநகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த அக்கிம்ராஜா (24), கோட்டூர் ஆவாரம்பட்டியை சேர்ந்த ஜெயராம் (24) மற்றும் தாடிக்கொம்பைச் சேர்ந்த பிரசாத் (24) ஆகியோர் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் கைதுசெய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.