×

திண்டுக்கல்: தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பாஜகவினர் கைது

வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்காததை கண்டித்து, திண்டுக்கல்லில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைதுசெய்யப்பட்டனர். முன்னதாக ஒய்.எம்.ஆர்.பட்டி காளியம்மன் கோயில் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, தடையை மீறி வேலுடன் வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைதுசெய்தனர்.
 

வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்காததை கண்டித்து, திண்டுக்கல்லில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைதுசெய்யப்பட்டனர்.

முன்னதாக ஒய்.எம்.ஆர்.பட்டி காளியம்மன் கோயில் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, தடையை மீறி வேலுடன் வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைதுசெய்தனர்.