×

திண்டுக்கல்: அறுவை சிகிச்சையின்போது தப்பாட்ட கலைஞர் உயிரிழப்பு – மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்

திண்டுக்கல்லில் அறுவை சிகிச்சையின்போது தப்பாட்ட கலைஞர் உயிரிழந்ததை கண்டித்து, உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் முனிசிபல் காலனி, குமரன் தெருவை சேர்ந்தவர் கோபி (36). தப்பாட்ட இசை கலைஞரான இவர், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், உறவினர்கள் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கோபியை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்
 

திண்டுக்கல்லில் அறுவை சிகிச்சையின்போது தப்பாட்ட கலைஞர் உயிரிழந்ததை கண்டித்து, உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் முனிசிபல் காலனி, குமரன் தெருவை சேர்ந்தவர் கோபி (36). தப்பாட்ட இசை கலைஞரான இவர், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், உறவினர்கள் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கோபியை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, நேற்றிரவு அறுவை நடைபெற்றது. இதில் கோபி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த கோபியின் உறவினர்கள், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கோபி உயிரிழந்ததாக கூறி, மருத்துவமனையை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல் நிலைய போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோபியின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறிய அவர்கள், தொடர்ந்து மருத்துவமனை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.