திண்டுக்கல்: திருமாவளவனை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
இந்து பெண்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திண்டுக்கல்லில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாவட்ட மகளிரணி தலைவி ஆனந்தி தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது விசிகவிற்கு எதிராகவும், திருமாவளவனுக்கு எதிராகவும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். இந்நிலையில், அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைதுசெய்தனர்.
Oct 27, 2020, 20:08 IST
இந்து பெண்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திண்டுக்கல்லில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாவட்ட மகளிரணி தலைவி ஆனந்தி தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது விசிகவிற்கு எதிராகவும், திருமாவளவனுக்கு எதிராகவும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். இந்நிலையில், அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைதுசெய்தனர்.