×

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு!

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்தவர் நெஸ் புரூஸ். இவரது மகன் சதீஷ் (18). இவர் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு, கல்லூரியில் சேர முயற்சித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சதீஷ், தனது நண்பர்களுடன் கட்டகாமன்பட்டி பகுதியில் உள்ள தனியார் தோட்ட கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றிருந்தார். கிணற்றில் இறங்கி குளித்தபோது, எதிர்பாராத
 

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்தவர் நெஸ் புரூஸ். இவரது மகன் சதீஷ் (18). இவர் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு, கல்லூரியில் சேர முயற்சித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சதீஷ், தனது நண்பர்களுடன் கட்டகாமன்பட்டி பகுதியில் உள்ள தனியார் தோட்ட கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றிருந்தார்.

கிணற்றில் இறங்கி குளித்தபோது, எதிர்பாராத விதமாக சதீஷ் தண்ணீரில் மூழ்கி மாயமாகினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சென்று கிணற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணிநேர தேடலுக்கு பின் அவர்கள் சதீஷை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். தொடந்து, போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.