×

திண்டுக்கல் அருகே காரில் கடத்திய 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் – ஒருவர் கைது!

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே காரில் கடத்த முயன்ற 100 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, தாடிக்கொம்பு காவல் உதவி ஆய்வாளர் ரபிக் தலைமையிலான போலீசார், தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த
 

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே காரில் கடத்த முயன்ற 100 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, தாடிக்கொம்பு காவல் உதவி ஆய்வாளர் ரபிக் தலைமையிலான போலீசார், தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை நடத்தினர். சோதனையின்போது, காரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா புகையிலை பொருட்கள் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, சுமார் 100 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, காரை ஓட்டிவந்த பெரியசாமி என்பவர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைதுசெய்தனர்.