×

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து – கூலி தொழிலாளி பலி

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் பாரம் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கூலி தொழிலாளி உடல்நசுங்கிஉயிரிழந்தார். தொப்பூர் அடுத்த சந்திரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி திருநீலகண்டன்(31). இவர் தர்மபுரியில் இருந்து இருசக்கர வாகனம் மூலம்சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்றபோது, குஜராத்தில் இருந்து கோவைக்கு பிளைவுட் பலகைகளை ஏற்றிவந்த லாரி மோதியது. இதில், திருநீலகண்டன் இருசக்கர வாகனத்துடன் சாலையில் விழுந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்து லாரி
 

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் பாரம் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கூலி தொழிலாளி உடல்நசுங்கி
உயிரிழந்தார். தொப்பூர் அடுத்த சந்திரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி திருநீலகண்டன்(31).

rep image

இவர் தர்மபுரியில் இருந்து இருசக்கர வாகனம் மூலம்சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்றபோது, குஜராத்தில் இருந்து கோவைக்கு பிளைவுட் பலகைகளை ஏற்றிவந்த லாரி மோதியது. இதில், திருநீலகண்டன் இருசக்கர வாகனத்துடன் சாலையில் விழுந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியின் அடியில் சிக்கிய திருநீலகண்டன், உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் அவரது உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய தொப்பூர் போலீசார், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.