×

ஃபேஸ்புக் பழக்கத்தில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை!

ஃபேஸ் புக் மூலம் பழகி காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மாரண்டஹள்ளி புதூரைச் சேர்ந்தவர் விக்னேஷ்(25). இவர் மாரண்டஹள்ளி அருகே கொலசனஹள்ளியில் செயல்பட்டுவரும் தனியார் பால் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு, திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் காஞ்சனா(21) என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கி, பின்னர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு தற்போது, பெண் குழந்தை
 

ஃபேஸ் புக் மூலம் பழகி காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மாரண்டஹள்ளி புதூரைச் சேர்ந்தவர் விக்னேஷ்(25). இவர் மாரண்டஹள்ளி அருகே கொலசனஹள்ளியில் செயல்பட்டுவரும் தனியார் பால் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இவருக்கு, திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் காஞ்சனா(21) என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கி, பின்னர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு தற்போது, பெண் குழந்தை உள்ள நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த காஞ்சனா, வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் ஃபேனில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாரண்டஹள்ளி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணம் நடந்து சில ஆண்டுகளே ஆவதால் தர்மபுரி ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது.