பணியின்போது ஏற்பட்ட மாரடைப்பால் துணை பி.டி.ஓ உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டதில் துணை பி.டி.ஓ உயிரிழந்தார். காரிமங்கலம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை பி.டி.ஓ-வாக பணியாற்றியவர் சிவப்பிரகாசம். இவர் வழக்கம்போல் இன்று காலை அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிவப்பிரகாசத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம்
Oct 21, 2020, 18:51 IST
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டதில் துணை பி.டி.ஓ உயிரிழந்தார். காரிமங்கலம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை பி.டி.ஓ-வாக பணியாற்றியவர் சிவப்பிரகாசம். இவர் வழக்கம்போல் இன்று காலை அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிவப்பிரகாசத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் தர்மபுரி மாவட்ட அரசுப்பணியாளர்கள் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.