×

மாரண்டஅள்ளி அருகே +2 மாணவி கடத்தல் – போலீசார் விசாரணை

தர்மபுரி தர்மபுரி அருகே உறவினர் வீட்டிற்கு சென்ற 12ஆம் வகுப்பு மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் மாரண்ட அள்ளி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை காரணமாக சிக்கமாரண்ட அள்ளி புதூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவர், கடந்த 19ஆம் தேதி இரவு இயற்கை உபாதைக்கு செல்வதாக கூறி சென்ற நிலையில்
 

தர்மபுரி

தர்மபுரி அருகே உறவினர் வீட்டிற்கு சென்ற 12ஆம் வகுப்பு மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் மாரண்ட அள்ளி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை காரணமாக சிக்கமாரண்ட அள்ளி புதூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவர், கடந்த 19ஆம் தேதி இரவு இயற்கை உபாதைக்கு செல்வதாக கூறி சென்ற நிலையில் மாயமாகினார்.

உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காத நிலையில், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மாரண்ட அள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்திச்செல்லப்பட்ட மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.