×

ஒகேனக்கலில் பரிசலில் சென்ற கர்நாடக மாநில பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை – பரிசல் ஓட்டுநர் கைது

தருமபுரி ஒகேனக்கல் அருகே பரிசலில் சென்ற கர்நாடக மாநில பெண்ணை, பரிசல் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் கலைவாணி(40) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த மாறுகொட்டாய் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்காக மணல்திட்டு பகுதியில் இருந்து பரிசல் ஒன்றில் ஏரி, காவிரி ஆற்றில் பயணித்துள்ளார். அப்போது படகை ஓட்டிச்சென்ற மூர்த்தி என்பவர், கலைவாணியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
 

தருமபுரி

ஒகேனக்கல் அருகே பரிசலில் சென்ற கர்நாடக மாநில பெண்ணை, பரிசல் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் கலைவாணி(40) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த மாறுகொட்டாய் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்காக மணல்திட்டு பகுதியில் இருந்து பரிசல் ஒன்றில் ஏரி, காவிரி ஆற்றில் பயணித்துள்ளார்.

அப்போது படகை ஓட்டிச்சென்ற மூர்த்தி என்பவர், கலைவாணியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அமுதாவின் அலறல் சத்தம்கேட்டு ஓடி வந்த, அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பரிசல் ஓட்டுநர் மூர்த்தியை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். பரிசலில் பயணித்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.