×

முதிய தம்பதி இரும்பு ராடால் அடித்துக்கொலை… வீடுகட்ட பணம் தராததால் மகன் வெறிச்செயல்…

தருமபுரி தருமபுரி அருகே வீடுகட்ட பணம் தர மறுத்த தாய், தந்தையை இரும்பு ராடால் அடித்துகொன்ற மெக்கானிக்கை போலீசார் கைதுசெய்தனர். தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த பூச்செட்டி அள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன்(65) – சின்னராஜி(60) தம்பதியினர். இவர்களுக்கு ராமசாமி (40) என்ற மகனும், சுமதி(35) என்ற மகனும் உள்ளனர். ராமசாமி, அதே பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். சுமதி திருமணமாகி பென்னாகரம் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், சின்னராஜிக்கு சொந்தமான
 

தருமபுரி

தருமபுரி அருகே வீடுகட்ட பணம் தர மறுத்த தாய், தந்தையை இரும்பு ராடால் அடித்துகொன்ற மெக்கானிக்கை போலீசார் கைதுசெய்தனர்.

தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த பூச்செட்டி அள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன்(65) – சின்னராஜி(60) தம்பதியினர். இவர்களுக்கு ராமசாமி (40) என்ற மகனும், சுமதி(35) என்ற மகனும் உள்ளனர். ராமசாமி, அதே பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். சுமதி திருமணமாகி பென்னாகரம் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், சின்னராஜிக்கு சொந்தமான நிலத்தை மகன் மற்றும் மகளுக்கு பிரித்து கொடுத்து உள்ளார். சுமதி தனது நிலத்தில் வீடு கட்டி வருகிறார். இதனால் தானும் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்த ராமசாமி, பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று ராமசாமி மது அருந்திவிட்டு சென்று தாயார் சின்னராஜியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

அதற்கு சின்னராஜி மறுப்பு தெரிவித்தால் ஆத்திரமடைந்த அவர், இரும்பு ராடால் சின்னராஜியின் தலையில் தாக்கினார். மேலும், அவரை தடுக்க முயன்ற ராமச்சந்திரனையும் இரும்பு ராடால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். கொலையாளி ராமசாமி இண்டூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனை அடுத்து, போலீசார் சடலங்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.