×

தர்மபுரி- காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை – வரதட்சணை கொடுமை காரணமா?

தர்மபுரி தர்மபுரியில் ஃபேஸ்புக் மூலம் பழகி காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்துகொண்டதற்கு வரதட்சணை கொடுமையே காரணம் என அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மாரண்டஹள்ளி புதூரைச் சேர்ந்தவர் விக்னேஷ்(25). தனியார் பால் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு, திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த காஞ்சனா(21) என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கி, பின்னர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு தற்போது, பெண் குழந்தை
 

தர்மபுரி

தர்மபுரியில் ஃபேஸ்புக் மூலம் பழகி காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்துகொண்டதற்கு வரதட்சணை கொடுமையே காரணம் என அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மாரண்டஹள்ளி புதூரைச் சேர்ந்தவர் விக்னேஷ்(25). தனியார் பால் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு, திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த காஞ்சனா(21) என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கி, பின்னர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு தற்போது, பெண் குழந்தை உள்ள நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காஞ்சனா, வீட்டில் ஆள்இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலின் பேரில் மாரண்டஹள்ளி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு திரண்ட காஞ்சனாவின்

பெற்றோர் மற்றும் உறவினர்கள், வரதட்சணை கேட்டு காஞ்சனாவை, கணவர் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், அதனால் காஞ்சனா இறப்பில் மர்மம் உள்ளதாக கூறினார். மேலும், அவர் இறப்புக்கு காரணமானவர்களை கைதுசெய்யும் வரை உடலை எடுத்துச்செல்ல அனுமதிக்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாலக்கோடு டிஎஸ்பி சீனிவாசன், விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதையேற்று அவர்கள் கலைந்துசென்றனர்.