×

தர்மபுரி- கார் ஓட்டுநர் மாயம் – கண்டுபிடிக்கக் கோரி போலீசில் புகார்

தர்மபுரி தர்மபுரி அருகே மாயமான கார் ஓட்டுநரை கண்டுபிடித்துத் தரக்கோரி காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர். பென்னாகரம் வட்டம் பெத்தம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் பெருமாள்(24). கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த பெருமாள், தனது ஊரில் சிலருக்கு கடனாக பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடன் பெற்றவர்கள் பணத்தை திருப்பி தராததால், பெருமாள் மன உளைச்சலில் தவித்து வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு திடீரென பெருமாள் மாயமாகி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்
 

தர்மபுரி

தர்மபுரி அருகே மாயமான கார் ஓட்டுநரை கண்டுபிடித்துத் தரக்கோரி காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

பென்னாகரம் வட்டம் பெத்தம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் பெருமாள்(24). கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த பெருமாள், தனது ஊரில் சிலருக்கு கடனாக பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடன் பெற்றவர்கள் பணத்தை திருப்பி தராததால், பெருமாள் மன உளைச்சலில் தவித்து வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு திடீரென பெருமாள் மாயமாகி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு

இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் காணாமல் போன மகனை கண்டுபிடித்துத் தரக் கோரி பென்னாகரம் காவல் நிலையத்தில், ஆறுமுகம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பென்னாகரம் போலீசார், மாயமான பெருமாளை தீவிரமாக தேடி வருகின்றனர்.