×

தர்மபுரி- இதயநோய் குணமாக எலி இறைச்சி சாப்பிட்ட பெண் உயிரிழப்பு

தர்மபுரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே இதய பிரச்சினையை குணமாக்க எலி இறைச்சி சாப்பிட்ட பெண் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொப்பூர் அருகிலுள்ள கம்மம்பட்டி மூலக்காடு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரது மனைவி சரிதா(30). இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், சரிதாவுக்கு இதய பிரச்சினை ஏற்பட்டு சிரமப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. உறவினர்கள் சிலர், எலி இறைச்சி சாப்பிட்டால் இதய பிரச்சினை குணமாகி விடும் என கூறியுள்ளனர். இதை நம்பி,
 

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே இதய பிரச்சினையை குணமாக்க எலி இறைச்சி சாப்பிட்ட பெண் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொப்பூர் அருகிலுள்ள கம்மம்பட்டி மூலக்காடு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரது மனைவி சரிதா(30). இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், சரிதாவுக்கு இதய பிரச்சினை ஏற்பட்டு சிரமப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

உறவினர்கள் சிலர், எலி இறைச்சி சாப்பிட்டால் இதய பிரச்சினை குணமாகி விடும் என கூறியுள்ளனர். இதை நம்பி, விவசாய நிலத்தில் இறந்துகிடந்த எலி ஒன்றை எடுத்து வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சற்று நேரத்தில் சரிதா மயங்கி விழுந்த நிலையில், உறவினர்கள் அவரை மீட்டு தொப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தொப்பூர் போலீசார் எலி இறைச்சி ஒவ்வாமையால் சரிதா இறந்தரா? அல்லது விஷம் வைத்து கொல்லப்பட்ட எலியை சமைத்து சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? என விசாரித்து வருகின்றனர்.