மணல் கடத்திவந்த டிராக்டர் பறிமுதல் – ஓட்டுநருக்கு போலீசார் வலை
தர்மபுரி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணல் கடத்திவந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். பாலக்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அண்ணாமலைஅள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்த டிராக்டரை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். போலீசாரை கண்டதும், ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பியோடினார். இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் டிராக்டரில் மணல் கடத்திவந்தது தெரியவந்தது. மேலும், போலீசாரின் தொடர் விசாரணையில் டிராக்டரை ஓட்டிவந்தவர் சொன்னம்பட்டியை சேர்ந்த சக்தி (32) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து திருட்டு மணல்
Oct 22, 2020, 13:43 IST
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணல் கடத்திவந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாலக்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அண்ணாமலைஅள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்த டிராக்டரை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். போலீசாரை கண்டதும், ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பியோடினார். இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் டிராக்டரில் மணல் கடத்திவந்தது தெரியவந்தது. மேலும், போலீசாரின் தொடர் விசாரணையில் டிராக்டரை ஓட்டிவந்தவர் சொன்னம்பட்டியை சேர்ந்த சக்தி (32) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து திருட்டு மணல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், தப்பிஓடிய சக்தியை தேடி வருகின்றனர்.