×

தர்மபுரி: ஒருதலைக்காதல் – இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் போச்சோவில் கைது

புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிடுவேன் என்று இளம்பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தர்மபுரி அடுத்த எர்ரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருமால்(32). இவர் மணமானவர். தனியார் கல்லூரி ஒன்றில் ஓராண்டுக்கு முன்பு பஸ் டிரைவராக பணியாற்றி உள்ளார். அப்போது அவர் டிரைவாக இருந்த பஸ்ஸில் கல்லூரிக்கு சென்று வந்த, தர்மபுரியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். மேலும், ஒருதலையாக அந்தப் பெண்ணை அவர் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணுக்கு
 

 புகைப்படத்தை  மார்பிங் செய்து வெளியிடுவேன் என்று இளம்பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தர்மபுரி அடுத்த எர்ரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருமால்(32). இவர் மணமானவர். தனியார் கல்லூரி ஒன்றில் ஓராண்டுக்கு முன்பு பஸ் டிரைவராக பணியாற்றி உள்ளார். அப்போது அவர் டிரைவாக இருந்த பஸ்ஸில் கல்லூரிக்கு சென்று வந்த, தர்மபுரியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். மேலும், ஒருதலையாக அந்தப் பெண்ணை அவர் காதலித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். இதையறிந்த திருமால், ’’தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் உன்னுடைய போட்டோக்களை கிராபிக்ஸ் செய்து இணைய தளங்களில் வெளியிடுவேன்’’ என்று அந்த இளம்பெண்ணை  மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக இளம்பெண் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரித்த போலீசார், இளம்பெண்ணின் புகார் உண்மை என்பதை உறுதி செய்து, திருமாலை போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.