×

தருமபுரி அருகே விபத்தில் ஆயுதப்படை காவலர் பலி… திருமணமான ஒரு மாதத்தில் சோகம்!

தருமபுரி தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில், ஆயுதப்படை காவலர் உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பனைகாணள்ளி கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி (28). இவர் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அத்துகானஹள்ளியை சேர்ந்த கௌதமி உடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், ஆடி 18-க்காக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த புகழேந்தி, நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில்
 

தருமபுரி

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில், ஆயுதப்படை காவலர் உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பனைகாணள்ளி கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி (28). இவர் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அத்துகானஹள்ளியை சேர்ந்த கௌதமி உடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், ஆடி 18-க்காக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த புகழேந்தி, நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் மாமியார் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். மகேந்திரமங்கலம் அருகே சென்றபோது புகழேந்தியின் வாகனம் மீது, எதிரே வந்த அரசுப்பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த தருமபுரி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் ஆயுதப்படை காவலர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.