×

தர்மபுரி:குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்: 2 குழந்தைகள் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கிணற்றில் இருந்த இளம்பெண் உயிருடன் மீட்கப்பட்டபோதும், அவரது 2 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரூர் அருகே உள்ள அச்சல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி(30). இவருக்கு பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள எச்.புதுப்பட்டியைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவருடன் மணமாகி 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 மாத வயதுடைய ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். கணவர் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வந்தார். தற்போது செல்வி
 

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கிணற்றில் இருந்த இளம்பெண் உயிருடன் மீட்கப்பட்டபோதும், அவரது 2 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரூர் அருகே உள்ள அச்சல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி(30). இவருக்கு பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள எச்.புதுப்பட்டியைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவருடன் மணமாகி 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 மாத வயதுடைய ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். கணவர் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வந்தார்.

தற்போது செல்வி தன் தாய் வீட்டில் தங்கி இருந்தார். இன்று மாலை அச்சல்வாடி பகுதியில் ஒரு விவசாயக் கிணற்றில் செல்வி தத்தளித்தபடி இருந்தது தெரிய வந்தது. உடனே அப்பகுதி மக்கள் செல்வியை மீட்டனர். செல்வி கொடுத்த தகவலின்படி அவரது 2 குழந்தைகளும் கிணற்றில் இருப்பதை அறிந்து அரூர் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் 3 மணி நேரம் போராடிய நிலையில் 2 குழந்தைகளும் சடலமாகவே மீட்கப்பட்டன.

செல்வி தற்கொலை செய்ய குழந்தைகளுடன் கிணற்றில் குதித்தாரா அல்லது தவறி 3 பேரும் கிணற்றில் விழுந்தனரா என்று அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.