×

அரூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி!

தருமபுரி தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஆற்றில் குளித்த சிறுவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கையலாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மாதேஸ்(13) மற்றும் வெற்றிவேல்(8). இவர்கள் அங்குள்ள அரசுப்பள்ளியில் முறையே 8 மற்றும் 3ஆம் வகுப்பு படித்து வந்தனர். பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்த சிறுவர்கள் இருவரும், நேற்று அங்குள்ள வாணியாற்றுக்கு குளிக்க சென்றனர். ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இருவரும்
 

தருமபுரி

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஆற்றில் குளித்த சிறுவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கையலாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மாதேஸ்(13) மற்றும் வெற்றிவேல்(8). இவர்கள் அங்குள்ள அரசுப்பள்ளியில் முறையே 8 மற்றும் 3ஆம் வகுப்பு படித்து வந்தனர். பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்த சிறுவர்கள் இருவரும், நேற்று அங்குள்ள வாணியாற்றுக்கு குளிக்க சென்றனர்.

ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் ஆற்றில் இறங்கி தேடியபோது, சிறுவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தகவல் அறிந்த அரூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.