×

தர்மபுரி: குழந்தை மர்ம மரணம் – போலீசார் விசாரணை

தர்மபுரி அடுத்த அரூரில் 3 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அரூர் அடுத்த ஆண்டிப்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்(31). இவர் மனைவி அகிலா(27). 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு, 3 மாதம் முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு அந்த குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுஅரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட
 

தர்மபுரி அடுத்த அரூரில் 3 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அரூர் அடுத்த ஆண்டிப்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்(31). இவர் மனைவி அகிலா(27). 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு, 3 மாதம் முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு அந்த குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுஅரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் குழந்தைக்கு, சில நாட்கள் கழித்து மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அதனை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த அரூர் போலீசார், குழந்தை உடல்நலக் குறைவினால் உயிரிழந்ததா?, அல்லது வேறு பின்னணி எதுவும் இருக்கிறதா? என்று விசாரித்து வருகின்றனர்.