×

தர்மபுரி: போலீஸ் எஸ்.ஐ உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம்

தர்மபுரி மாவட்டத்தில் உடல்நலக் குறைவால் இறந்த போலீஸ் எஸ்.ஐ உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ஏ.பள்ளிப்பட்டி அருகிலுள்ள தோழனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா(37). இவர் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் காவல்நிலையத்தில் எஸ்.ஐ-யாக பணியாற்றி வந்தார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்த இளையராஜாவின் உடல்நிலையில் கடந்த சில நாட்களாக பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். அவர் உடல் தகனம் இன்று மாலை அவரது சொந்த ஊரில் நடந்தது. இந்த
 

தர்மபுரி மாவட்டத்தில் உடல்நலக் குறைவால் இறந்த போலீஸ் எஸ்.ஐ உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ஏ.பள்ளிப்பட்டி அருகிலுள்ள தோழனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா(37). இவர் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் காவல்நிலையத்தில் எஸ்.ஐ-யாக பணியாற்றி வந்தார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்த இளையராஜாவின் உடல்நிலையில் கடந்த சில நாட்களாக

பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். அவர் உடல் தகனம் இன்று மாலை அவரது சொந்த ஊரில் நடந்தது.

இந்த நிகழ்வில் தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்மணி ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர் இளையராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது, அவரது

குடும்பத்தார் கதறி அழுதது அனைவரையும் கலங்கச் செய்வதாக இருந்தது.