×

தர்மபுரி: தென்னங்கன்றுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த முதியவரால் பரபரப்பு

தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் தென்னங்கன்றுடன் மனு அளிக்க வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி அடுத்த வெண்ணாம்பட்டியை சேர்ந்த முதியவர் வெங்கடேஷன்(61) என்பவர், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வாடிப்போன தென்னங்கன்று உடன் வந்தார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், முதியவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனக்கு சொந்தமான காலி நிலத்தில் தென்னை, மா மற்றும் முருங்கை மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வந்ததாகவும், பக்கத்து நிலத்துக்காரர்கள் தனது நிலத்தில்
 

தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் தென்னங்கன்றுடன் மனு அளிக்க வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி அடுத்த வெண்ணாம்பட்டியை சேர்ந்த முதியவர் வெங்கடேஷன்(61) என்பவர், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வாடிப்போன தென்னங்கன்று உடன் வந்தார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், முதியவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தனக்கு சொந்தமான காலி நிலத்தில் தென்னை, மா மற்றும் முருங்கை மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வந்ததாகவும், பக்கத்து நிலத்துக்காரர்கள் தனது நிலத்தில் அத்துமீறி நுழைந்து மரக்கன்றுகளை பிடுங்கி எறிந்ததுடன், நிலத்தை அபகரிக்கும் எண்ணத்துடன் மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து முதியவரை மனு அளிக்க போலீசார் அனுமதித்தனர்.