×

இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதிய விபத்தில் இளைஞர் பலி!

கடலூர் பண்ருட்டி அருகே இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கரும்பூர் கிராமத்தை சேர்ந்த நெடுஞ்செழியன் என்பவரது மகன் ரவிச்சந்திரன் (27). கூலி தொழிலாளி. இவரது நண்பர் ஒறையூரை சேர்ந்த மதியழகன் (30). இவர்கள் இருவரும் நேற்று பண்ருட்டி சென்றுவிட்டு இருசக்கர வாகத்தில் ஒறையூருக்கு திரும்பி கொண்டிருந்தனர். புதுப்பேட்டை அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியில் சென்றபோது, ரவிச்சந்திரன் வாகனத்தின் மீது, எதிரே வந்த மினிவேன்
 

கடலூர்

பண்ருட்டி அருகே இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கரும்பூர் கிராமத்தை சேர்ந்த நெடுஞ்செழியன் என்பவரது மகன் ரவிச்சந்திரன் (27). கூலி தொழிலாளி. இவரது நண்பர் ஒறையூரை சேர்ந்த மதியழகன் (30). இவர்கள் இருவரும் நேற்று பண்ருட்டி சென்றுவிட்டு இருசக்கர வாகத்தில் ஒறையூருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

புதுப்பேட்டை அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியில் சென்றபோது, ரவிச்சந்திரன் வாகனத்தின் மீது, எதிரே வந்த மினிவேன் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ரவிசந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மதியழகன் படுகாயம் அடைந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார், மதியழகனை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரவிச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, மினிவேன் ஓட்டுநரை கைதுசெய்து, விசாரித்து வருகின்றனர்.