×

விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம்- அரசு மருத்துவமனையில் சிபிசிஐடி விசாரணை

விருத்தாசலம் கடலூர் மாவட்டம், விருதாச்சலம் அருகே விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில், அரசு மருத்துவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். பண்ருட்டி அருகே காடாம்புலியூர் சேர்ந்த செல்வமுருகன் என்பவரை திருட்டு வழக்கில் விசாரிப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்ற நிலையில், கடந்த 4ம் தேதி விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து 7 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் செல்லவமுருகன் மரணத்தை
 

விருத்தாசலம்

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் அருகே விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில், அரசு மருத்துவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

பண்ருட்டி அருகே காடாம்புலியூர் சேர்ந்த செல்வமுருகன் என்பவரை திருட்டு வழக்கில் விசாரிப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்ற நிலையில், கடந்த 4ம் தேதி விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் உயிரிழந்தார்.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து 7 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் செல்லவமுருகன் மரணத்தை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க டிஜிபி உத்தரவிட்டார். இதையடுத்து 3 நாட்களாக கடலூர் மாவட்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை நடந்தி வந்த நிலையில், விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்வமுருகனை காவலர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்ததாக காவலர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் போராடி வருகின்றனர்.