அரசுப் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டத்தில் அரசுப்பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். வடலூர் அருகே விருத்தாசலத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசுப்பேருந்து மீது, புதுச்சேரியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற கார் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த கும்பகோணத்தை சேர்ந்த ஜீவிதா(19), மற்றும் ஓட்டுனர் பிரேம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுந்தரி என்பவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்தவமனையில் அனுமதித்தனர். வடலூர் போலீஸார் பிரேதங்களை
Oct 22, 2020, 20:30 IST
கடலூர் மாவட்டத்தில் அரசுப்பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
வடலூர் அருகே விருத்தாசலத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசுப்பேருந்து மீது, புதுச்சேரியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற கார் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த கும்பகோணத்தை சேர்ந்த ஜீவிதா(19), மற்றும் ஓட்டுனர் பிரேம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுந்தரி என்பவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்தவமனையில் அனுமதித்தனர். வடலூர் போலீஸார் பிரேதங்களை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.