சுகாதாரத்தை கடைபிடிக்காத 3 உணவகங்களுக்கு சீல் – ஆட்சியர் அதிரடி
கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வுமேற்கொண்டார். அப்போது, பேருந்து நிலையத்திலுள்ள பேருந்துகளின் உள்ளே சென்று அரசு உத்தரவுப்படி பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டுள்ளனரா? என ஆய்வு செய்தார். தொடர்ந்து, பேருந்து நிலைய வளாகத்திற்குள் செயல்படும் உணவகங்களை பார்வையிட்ட அவர், சுகாதாரம் கடைபிடிக்காமல் இடஆக்கிரமிப்பு செய்துள்ள 3 உணவகங்களுக்கு சீல்வைக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் முக கவசமின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு முக கவசம் அணிய அறிவுறுத்திய ஆட்சியர்,
Oct 16, 2020, 19:46 IST
கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வுமேற்கொண்டார். அப்போது, பேருந்து நிலையத்திலுள்ள பேருந்துகளின் உள்ளே சென்று அரசு உத்தரவுப்படி பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டுள்ளனரா? என ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பேருந்து நிலைய வளாகத்திற்குள் செயல்படும் உணவகங்களை பார்வையிட்ட அவர், சுகாதாரம் கடைபிடிக்காமல் இடஆக்கிரமிப்பு செய்துள்ள 3 உணவகங்களுக்கு சீல்வைக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் முக கவசமின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு முக கவசம் அணிய அறிவுறுத்திய ஆட்சியர், தன்னிடமிருந்த முகக் கவசங்களை அவர்களுக்கு வழங்கினார். இதனால் கடலூர் பேருந்து நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.