×

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை… போலி மந்திரவாதி கைது…

கடலூர் கடலூர் அருகே தோஷம் கழிப்பதாக கூறி பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த போலி மந்திரவாதியை போலீசார் கைதுசெய்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த ஓடாக்கநல்லூரை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஆனால் குணமடையவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட மந்திரவாதி ஒருவர், மாந்திரீகத்தின் மூலம் நோயை சரி செய்து விடுவதாக தெரிவித்துள்ளார். அதனை நம்பி அவரை, வீட்டிற்கு அழைத்துச்சென்று
 

கடலூர்

கடலூர் அருகே தோஷம் கழிப்பதாக கூறி பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த போலி மந்திரவாதியை போலீசார் கைதுசெய்தனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த ஓடாக்கநல்லூரை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஆனால் குணமடையவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட மந்திரவாதி ஒருவர், மாந்திரீகத்தின் மூலம் நோயை சரி செய்து விடுவதாக தெரிவித்துள்ளார்.

அதனை நம்பி அவரை, வீட்டிற்கு அழைத்துச்சென்று பூஜையில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது, மாந்திரீகர் அங்கிருந்த பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்தாக கூறப்படுகிறது. இதனை கண்ட குடும்பத்தினர் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், இதுகுறித்த தகவலின் பேரில் புவனகிரி போலீசார் அவரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

விசாரணையில், அவர் சீர்காழியை சேர்ந்த முருகேசன் மகன் சக்திவேல் என்பதும், மாந்திரீகம் செய்வதாக பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, அவரை கைதுசெய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.