20% போனஸ் வழங்கக் கோரி போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா
கடலூர் தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவீத தீபாவளி போனஸை 20 சதவீதம் ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தி, கடலூரில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள்தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் பணிமனையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பண்டிகைக் கால முன்பணத்தை உடனடியாக வழங்கவும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்கவும் தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
Nov 9, 2020, 17:28 IST
கடலூர்
தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவீத தீபாவளி போனஸை 20 சதவீதம் ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தி, கடலூரில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள்
தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் பணிமனையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பண்டிகைக் கால முன்பணத்தை உடனடியாக வழங்கவும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்கவும் தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.