×

போலி மருத்துவர்கள் இருவர் கைது; போலீஸ் சோதனையில் சிக்கினர்

கடலூர் சிதம்பரத்தில் 10ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த நபர் உள்பட 2 போலி மருத்துவர்களை, போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் வேங்கான் தெருவில் 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு ஒருவர் மருத்துவம் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. அதன் பேரில் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சங்கர் என்பவர் 10ஆம் வகுப்பு படித்துவிட்டு, மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், அவரிடம்
 

கடலூர்

சிதம்பரத்தில் 10ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த நபர் உள்பட 2 போலி மருத்துவர்களை, போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வேங்கான் தெருவில் 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு ஒருவர் மருத்துவம் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. அதன் பேரில் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சங்கர் என்பவர் 10ஆம் வகுப்பு படித்துவிட்டு, மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல சிதம்பரம் வடக்கு வடுக தெருவில் உள்ள மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். இதில் விபீஷபுனரத்தை சேர்ந்த திருஞானம் என்பவர், எம்பிபிஎஸ் படிக்காமல், மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரையும் கைதுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்