×

கடலூர்- அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த தந்தை, மகன் கைது

கடலூர் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் அனுமதியின்றி 5 ஏர்கன் துப்பாக்கிகளை வைத்திருந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் பகுதியில் உள்ள தைல மரத்தோப்பில் நேற்று சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் 5 துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்ற நிலையில், அவர்களை கண்டதும் இருவரும் தப்பியோடியுள்ளனர். அவர்கள் இருவரையும் விரட்டிப்பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் பரங்கிப்பேட்டை கலிமாநகரை சேர்ந்த முகமது அலி(52) மற்றும்
 

கடலூர்

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் அனுமதியின்றி 5 ஏர்கன் துப்பாக்கிகளை வைத்திருந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் பகுதியில் உள்ள தைல மரத்தோப்பில் நேற்று சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் 5 துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்ற நிலையில், அவர்களை கண்டதும்

இருவரும் தப்பியோடியுள்ளனர். அவர்கள் இருவரையும் விரட்டிப்பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் பரங்கிப்பேட்டை கலிமாநகரை சேர்ந்த முகமது அலி(52) மற்றும் அவரது மகன் பக்ரூதின் 28 என்பதும், அவர்கள் வைத்திருந்த 5 துப்பாக்கிகளுக்கு முறையான அனுமதி

பெறவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைதுசெய்த போலீசார், 5 ஏர்கன் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பரங்கிபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.