×

பேட்டரி கடை உரிமையாளர் வீட்டில் தங்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளை

கடலூர் கடலூர் அருகே பேட்டரி கடை உரிமையாளரின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் அடுத்த டி.குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் வேதகிரி. இவர் கடலூர் அரசு மருத்துவமனை அருகே பேட்டரி கடை நடத்தி வருகிறார். இவர் நாள்தோறும் தனது மனைவியுடன் காலையில் கடைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு தம்பதியினர் பணிமுடித்து வீடு திரும்பியபோது, வீட்டின் கதவுகள்
 

கடலூர்

கடலூர் அருகே பேட்டரி கடை உரிமையாளரின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் அடுத்த டி.குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் வேதகிரி.

இவர் கடலூர் அரசு மருத்துவமனை அருகே பேட்டரி கடை நடத்தி வருகிறார். இவர் நாள்தோறும் தனது மனைவியுடன் காலையில் கடைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு தம்பதியினர் பணிமுடித்து வீடு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் திறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 5 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து வேதகிரி நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தொடர்ந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்த போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.