×

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோவில் கைது!

கோவை கோவையில் பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற சிறுமி மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இறைச்சிக்கடை ஊழியர் பாபு என்பவர் காதலித்து
 

கோவை

கோவையில் பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற சிறுமி மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இறைச்சிக்கடை ஊழியர் பாபு என்பவர் காதலித்து வந்ததும், மேலும், சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, அவரது வீட்டில் இருந்த சிறுமியை மீட்ட போலீசார், அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்காண்டனர். அதில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளானது தெரியவந்தது.

இதனை அடுத்து, பாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்தனர். மேலும், சிறுமி பெற்றோருடன் செல்ல மறுத்ததால், அவரை தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.