×

கோவை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

கோவை கோவை அருகே குழந்தை இறந்த வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சிங்கையன்புதூர் பகுதியை சோ்ந்தவர் விவசாயி பாரதிராஜா (35). இவரது மனைவி மீனா (29). இவர்களுக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று இருந்தது. நுரையீரல் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனால், பாராதிராஜா மற்றும் மீனா ஆகியோர் மிகுந்த மன
 

கோவை

கோவை அருகே குழந்தை இறந்த வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சிங்கையன்புதூர் பகுதியை சோ்ந்தவர் விவசாயி பாரதிராஜா (35). இவரது மனைவி மீனா (29). இவர்களுக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று இருந்தது. நுரையீரல் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இதனால், பாராதிராஜா மற்றும் மீனா ஆகியோர் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை பாரதிராஜா தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபோது, மீனா தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கிணத்துக்கடவு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீனாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து மீனாவின் பெற்றோர் புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.