×

விபத்தில் பலியான காதலன்… வேதனையில் உயிரை மாய்த்த இளம்பெண்…

கோவை கோவை அருகே காதலன் உயிரிழந்த வேதனையில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் வசித்து வருபவர் சவரணன். இவரது மகள் சரண்யா (23). பி.எஸ்.வி முடித்துள்ள இவர், உறவினரான அஜித் என்பவரை சிறு வயது முதலே காதலித்து வந்துள்ளார். இருவீட்டாரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த நிலையில், கடந்த மாதம் சாலை விபத்தில் அஜித் உயிரிழந்தார். இதனால், சரண்யா மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில்,
 

கோவை

கோவை அருகே காதலன் உயிரிழந்த வேதனையில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் வசித்து வருபவர் சவரணன். இவரது மகள் சரண்யா (23). பி.எஸ்.வி முடித்துள்ள இவர், உறவினரான அஜித் என்பவரை சிறு வயது முதலே காதலித்து வந்துள்ளார். இருவீட்டாரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த நிலையில், கடந்த மாதம் சாலை விபத்தில் அஜித் உயிரிழந்தார்.

இதனால், சரண்யா மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சரண்யா தூக்கில் சடலமாக தொங்கியதை கண்ட உறவினர்கள் இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து சரவணன் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.