×

சிறுமிக்கு பாலியல் தொல்லை – பெற்றோருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. விருதநகர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் தங்கியிருந்து, தென்னை நார் உரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இத்தம்பதியினருக்கு 12 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், சிறுமியின் தந்தை, மகள் என்றும் பாராமல் பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்துள்ளார். இதனை அறிந்தும் சிறுமியின் தாய், தனது கணவரை கண்டிக்காமல் உடந்தையாக
 

கோவையில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. விருதநகர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் தங்கியிருந்து, தென்னை நார் உரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இத்தம்பதியினருக்கு 12 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், சிறுமியின் தந்தை, மகள் என்றும் பாராமல் பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்துள்ளார்.


இதனை அறிந்தும் சிறுமியின் தாய், தனது கணவரை கண்டிக்காமல் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமி அளித்த புகாரின் பேரில் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்த ஆனைமலை போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராதிகா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கும், அதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.