×

வேனில் கடத்திய ரூ.12.5 லட்சம் குட்கா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவை கோவையில் சரக்கு வாகனத்தில் கடத்திவந்த ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்ய சரக்கு வாகனத்தில் குட்கா, பான்மசாலா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் பெரியநாயக்கன் பாளையம் உதவி ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையில் போலீசார், நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்த மணிக்காரம் பாளையம் மவுண்டன் வீயூ குடியிருப்பு பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த பகுதியில்
 

கோவை

கோவையில் சரக்கு வாகனத்தில் கடத்திவந்த ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்ய சரக்கு வாகனத்தில் குட்கா, பான்மசாலா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் பெரியநாயக்கன் பாளையம் உதவி ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையில் போலீசார், நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்த மணிக்காரம் பாளையம் மவுண்டன் வீயூ குடியிருப்பு பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த பகுதியில் சாலையில் நின்ற சரக்கு வேனில் அட்டை பெட்டிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, வேனில் 18 பெட்டிகளில் இருந்த சுமார் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 500 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், குட்கா பொருட்களை கடத்தியது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வேன் ஓட்டுநர் கங்காதரன்(40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.