×

கோவையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 29 பேர் கைது- போலீசார் அதிரடி

கோயமுத்தூர் கோவை மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி நேற்று பல்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 29 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து பணம் மற்றும் இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டத்தில் நேற்று காணும் பொங்கலை ஒட்டி குற்றச்செயல்கள் நடைபெறாத வண்ணம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், பொள்ளாச்சி அடுத்த கஞ்சம்பட்டி பகுதியில் பண்ணை வீட்டில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கோமங்கலம் போலீசாருக்கு
 

கோயமுத்தூர்

கோவை மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி நேற்று பல்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 29 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து பணம் மற்றும் இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் நேற்று காணும் பொங்கலை ஒட்டி குற்றச்செயல்கள் நடைபெறாத வண்ணம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், பொள்ளாச்சி அடுத்த கஞ்சம்பட்டி பகுதியில் பண்ணை வீட்டில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கோமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.மேலும், அவர்களிடம் இருந்து 8 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், கோவை மாவட்டம் சுண்டக்காமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் நடந்த அதிரடி சோதனையில் மைதானத்தில் பணம் வைத்து சூதாடிய 5 இளைஞர்களை கைதுசெய்த போலீசார், 12 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல்செய்தனர். மேலும், கோவை மாவட்டம் நல்லாம்பாளையம் கிராமத்தில் சேவல் சண்டையின்போது பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை ரகசிய தகவலின் பேரில் கைசெய்த போலீசார், அவர்களிம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.