×

குழந்தை இல்லாத ஏக்கத்தில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

கோவை பொள்ளாச்சி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் கரப்பாடியை சேர்ந்தவர் அய்யனேஷ்வரன். இவரது மனைவி சர்மிளா(26). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. அய்யனேஷ்வரன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வகிறார். இதனால் தம்பதியினர் இருவரும் காஞ்சிபுரத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சர்மிளா பொள்ளாச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து
 

கோவை

பொள்ளாச்சி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் கரப்பாடியை சேர்ந்தவர் அய்யனேஷ்வரன். இவரது மனைவி சர்மிளா(26). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. அய்யனேஷ்வரன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வகிறார். இதனால் தம்பதியினர் இருவரும் காஞ்சிபுரத்தில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சர்மிளா பொள்ளாச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார். குழந்தை இல்லாததால், அவர் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சர்மிளா துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலின் பேரில் பொள்ளாச்சி டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் நெகமம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகளில் மணப்பெண் உயிரிழந்ததால், இதுகுறித்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.