×

வீட்டின் முன் மது அருந்தியதை கண்டித்த இளைஞர்களுக்கு கத்திக்குத்து… 3 பேர் கைது…

கோவை வீட்டின் முன்பு மது அருந்தியதை கண்டித்த 2 இளைஞர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகளை போலீசார் கைதுசெய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ராஜபாளையம், ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் அரவிந்தன்(22). இவரது உறவினர் பிரதீப். நேற்றிரவு இவர்கள் வீட்டின் முன்பு மர்மநபர்கள் சிலர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதனை கண்ட அரவிந்தன், அவர்களிடம் சென்று அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். இதற்கு மறுப்பு தெரிவித்த போதை ஆசாமிகள் அரவிந்தனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய
 

கோவை

வீட்டின் முன்பு மது அருந்தியதை கண்டித்த 2 இளைஞர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகளை போலீசார் கைதுசெய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ராஜபாளையம், ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் அரவிந்தன்(22). இவரது உறவினர் பிரதீப். நேற்றிரவு இவர்கள் வீட்டின் முன்பு மர்மநபர்கள் சிலர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதனை கண்ட அரவிந்தன், அவர்களிடம் சென்று அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். இதற்கு மறுப்பு தெரிவித்த போதை ஆசாமிகள் அரவிந்தனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், போதை ஆசாமிகள் இளைஞர் அரவிந்தனை கைகளாலும், தாங்கள் வைத்திருந்த கத்தியாலும் சராமாரியாக தாக்கினர்.

மேலும், அதனை தடுக்க முயன்ற பிரதீப்பையும் கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர். இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அரவிந்தன் தந்தை அளித்த புகாரின் பேரில் தாக்குதல் நடத்திய அதே பகுதியை சேர்ந்த பூபதிராஜ், அருண்குமார் மற்றும் தினேஷ் ஆகியோரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.