×

ஈஷா அமைப்பு நடத்தும் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி… பொதுமக்களும் பங்கேற்க அழைப்பு!

ஈஷா அமைப்பின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருப்பூரில் வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடக்கும் ‘மரம் நட விரும்பு’ என்ற நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களும் பங்கேற்று மரங்கள் நடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவேரி கூக்குரல் இயக்கம் மண்ணின் வளத்தையும் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிப்பதற்காக மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. எனவே இம்முயற்சி தமிழக விவசாயிகளிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இப்பணியில் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த
 

ஈஷா அமைப்பின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருப்பூரில் வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடக்கும் ‘மரம் நட விரும்பு’ என்ற நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களும் பங்கேற்று மரங்கள் நடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவேரி கூக்குரல் இயக்கம் மண்ணின் வளத்தையும் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிப்பதற்காக மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. எனவே இம்முயற்சி தமிழக விவசாயிகளிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

இப்பணியில் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாகவும் ‘மரம் நட விரும்பு’ என்ற நிகழ்ச்சி வெவ்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா, இச்சிபட்டி கிராமத்தில் உள்ள விவசாயி திரு.சிவசாமி அவர்களின் நிலத்தில் மரம் நடும் பணி வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற உள்ளது. 9 ஏக்கர் பரப்பில் நடக்கும் இப்பணியில் சுற்றுச்சூழல் மீது ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று மரம் நடலாம். விருப்பம் உள்ளவர்கள் 94425 90016 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.