×

கோவையில் உரிய ஆவணமில்லாத 3 கிலோ தங்கம் பறிமுதல்!

கோவை கோவையில் உரிய ஆவணமின்றி வேனில் எடுத்துவரப்பட்ட 3 கிலோ தங்கம் மற்றும் 30 லட்சம் ரூபாய் பணத்தை, பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் நஞ்சுண்டபுரம் சாலையில், இன்று காலை பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருச்சியில் இருந்து கோவை நோக்கி சென்ற வேனை மறித்து சோதனையிட்டனர். அதில் வேனில் இருந்த பார்சலில் 3 கிலோ 150 கிராம் தங்கம் இருப்பது
 

கோவை

கோவையில் உரிய ஆவணமின்றி வேனில் எடுத்துவரப்பட்ட 3 கிலோ தங்கம் மற்றும் 30 லட்சம் ரூபாய் பணத்தை, பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் நஞ்சுண்டபுரம் சாலையில், இன்று காலை பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருச்சியில் இருந்து கோவை நோக்கி சென்ற வேனை மறித்து சோதனையிட்டனர்.

அதில் வேனில் இருந்த பார்சலில் 3 கிலோ 150 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. இது குறித்து வாகன ஓட்டியிடம் விசாரித்தபோது அவற்றை பிரபல நகைக்கடைக்கு கொண்டு செல்வதாக கூறினர்.ஆனால், அதற்குரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் 3.150 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அதனை கோவை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல், கோவை சவுரிபாளையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், அந்த வழியாக வந்த ஏடிஎம்மிற்கு பணம் நிரப்பு வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அதில் வாகனத்தில் 30 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச்சென்றது தெரியவந்தது. ஆனால் அவற்றுக்கு உரிய ஆவணங்களில் வாகன ஒட்டுநரிடம் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பறிமுதலான பணம் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.