×

கோவை- மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதல் – 2 இளைஞர்கள் பலி

கோவை கோவை அருகே இருசக்கர வாகனம் மீது மினி டெம்போ மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். தொண்டாமுத்தூரை அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(19), பாபு(20) மற்றும் ஆனந்த்(19) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் நரசிபுரம் நோக்கி சென்றுள்ளனர். நரசிபுரம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த மினிடெம்போ மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கார்த்திக், பாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஆனந்தை, அப்பகுதி மக்கள்
 

கோவை

கோவை அருகே இருசக்கர வாகனம் மீது மினி டெம்போ மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

தொண்டாமுத்தூரை அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(19), பாபு(20) மற்றும் ஆனந்த்(19) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் நரசிபுரம் நோக்கி சென்றுள்ளனர். நரசிபுரம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த மினிடெம்போ மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கார்த்திக், பாபு

ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஆனந்தை, அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆலந்துறை போலீசார், இளைஞர்கள் மதுபோதையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதா என விசாரித்து வருகின்றனர்.